வீரப்பன்: நாளை அதிரடிப்படையின் ஆலோசனைக் கூட்டம்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகக் காட்டுக்குள் புகுந்துள்ள கூட்டு அதிரடிப்படையினர், திங்கள்கிழமைகூடி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக, கடந்த ஜூன் 21ம் தேதி தமிழக-கர்நாடக அதிரடிப் படையினர் காட்டுக்குள் புகுந்தனர்.தமிழக அதிரடிப்படைக்குத் தேவாரம் தலைமை தாங்கி, சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
கெம்பையா, கர்நாடக அதிரடிப்படையினருக்குத் தலைமை தாங்கி காட்டுக்குள் வீரப்பன் வேட்டையில்ஈடுபட்டுள்ளார்.
காட்டுக்குள் நுழைந்து, 4 நாட்கள் ஆகிவிட்ட போதும், தேடுதல் வேட்டையில் முன்னேற்றம் எதுவும்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 2 மாநில அதிரடிப்படை வீரர்களும் திங்கள்கிழமை கூடி, முக்கியமான ஆலோசனையில் ஈடுபடப்போவதாகக் காட்டிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தகட்டநடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.
ஆனால், கூட்டம் எங்கு நடக்கும் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும், மலைப் பகுதிகளிலேயேஎங்காவது ஒரு இடத்தில், அதிரடிப்படையினரின் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.