கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்தது: 50 பேர் சாவு
கோல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில், கங்கை நதியில் படகு கவிழ்ந்ததில் 50 பேருக்கு மேல் தண்ணீரில் மூழ்கிஇறந்தனர்.
சுமார் 125 பேர் இந்தப் படகில் பயணம் செய்ததால், எடை தாங்காமல் இந்தப் படகு கவிழ்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த போது, கங்கை நதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது என்றும், அதனால்தான் படகு கவிழ்ந்தது என்றும்கூறப்படுகிறது.
சிலர் நீந்திக் கரை ஏறினார்கள். பலர் பக்கத்துக் கிராம மக்களால் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களில் ஒருகுழந்தையும் அடங்கும். தப்பிய இன்னொரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், கடுமையாக வீசும் காற்றினாலும், அதிகமாகப் பாய்ந்துவரும் தண்ணீராலும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு, மீட்புப் பணிகளும் சுணங்கியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்., யு.என்.ஐ.