குற்றாலத்தில் சாரல்: சீசன் துவங்கியது
திருநெல்வேலி:
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சீசன் களைகட்டியுள்ளது. குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வரவும்அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாககுற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் தொடர்ந்து கோடை வெயில் கடுமையாக இருந்ததால் அருவிகளில் நீர் வரத்து இல்லாமல் இருந்தது. கேரளாவில்மழை அதிகமாக பெய்து வருவதால் குற்றாலத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குற்றாலத்திலும் மழை பெய்தது. இது மேலும் நீர் வரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
மெயின் அருவியில் கூட்டம் அதிகமாக உள்ளது. சுற்றுலாப்பயணிகள் கூட்டம் ஐந்தருவியில் அதிகமாக காணப்படுகிறது.ஐந்தருவி, மெயின் அருவி, செண்பகாதேவி அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைந்துள்ளன.