மேலும் ஒரு அமைச்சரின் பதவி பறிப்பு: வளர்மதி ஜெபராஜ் அமைச்சரானார்
சென்னை:
தனது அமைச்சரவையிலிருந்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வெங்கடாச்சலத்தைமுதலமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
இவருக்குப் பதிலாக மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வளர்மதி ஜெபராஜ் பிற்பட்டோர்நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தபி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்தவர்.
செவ்வாய்க்கிழமை காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் பாத்திமா பீவியை ராஜ்பவனுக்குச் சென்றுசந்தித்தார். அப்போது அவரிடம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வெங்கடாசலத்தை நீக்கவும் வளர்மதிஜெபராஜை அமைச்சராக நியமிப்பதற்கும் ஒப்புதல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவும், கவர்னர் பாத்திமா பீவியும் சுமார் 30 நிமிடங்கள் பேசினர்.
ராஜ்பவன் வெளியே ஏராளமான நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால் ஜெயலலிதா இந்த சந்திப்பு குறித்துநிருபர்களிடம் எதுவும் பேசவில்லை.
முன்னதாக, திங்கள்கிழமை மாலை நடந்த அதிமுக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்குறித்து ஜெயலலிதா, கவர்னரிடம் தெரிவித்திருப்பார் என்று நம்பப்படுகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து கவர்னரிடம் செவ்வாய்க்கிழமைதெரிவிக்கவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த ஜூன் 9ம் தேதிதான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் அய்யாறு வாண்டையார், தொழில்துறை அமைச்சர்பொள்ளாச்சி ஜெயராம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன.
இவர்களுக்குப் பதிலாக நாகப்பட்டினம் ஜீவானந்தம், உடுமலைப்பேட்டை சி. சண்முகவேலு, ஒரத்தநாடுவைத்திலிங்கம் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சிக்குவந்து 44 நாட்களில் 4 அமைச்சர்கள் பதவி இழந்துள்ளனர்.
யு.என்.ஐ.