For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கள போலீசாரால் தமிழ்ப்பெண் கற்பழிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சோதனைச் சாவடியில் தமிழ்ப்பெண் ஒருவரை சிங்கள போலீஸார் பலவந்தமாகக்கற்பழித்தனர்.

இது தொடர்பாக 3 போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு நகருக்குள் விடுதலைப்புலிகள் தற்கொலைப் படையினர் ஊடுருவி விடாமல் இருப்பதற்காக போலீஸார் பலநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக நகரின் முக்கியப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று கொழும்பு நகருக்கு வந்த 28 வயது தமிழ்ப்பெண் ஒருவரை போலீஸார் சோதனை செய்வதற்காக தடுத்துநிறுத்தினர்.

பின்னர் அவரை அருகில் உள்ள சிறிய படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாகக் கற்பழித்தனர். இந்தச்சம்பவம் தொடர்பாக 3 சிங்கள போலீஸார் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் நடந்த போது சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சில ராணுவ வீரர்களைக் கைது செய்யவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டிருப்பதாக மரதானா போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையின் மற்ற பகுதிகளில் இருந்து கொழும்பு நகருக்குள் வரும் அப்பாவி தமிழர்கள் சோதனை என்ற பெயரில் அப்பாவித்தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X