For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமரைக்கனி மீது விசாரணை கோருகிறார் மகன்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஏழை மக்களை ஏமாற்றி மோசம் செய்த தாமரைக்கனியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை தலைவர் பதவியிலிருந்துபதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவரது மகன் இன்பத்தமிழன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொடுக்கப்பட்டிருந்த இலவச வேட்டிகளை பதுக்கி வைத்ததாமரைக்கனி நகரசபை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும்உத்தரவிட வேண்டும்.

மிரட்டல் அரசியலிலிருந்து தாமரைக்கனிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் ஒய்வு கொடுத்து விட்டனர். அவர் மீது பலஊழல் வழக்குகள் உள்ளன. அவை குறித்தும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்.

ஏழை மக்களை மோசம் செய்துவிட்டு நிரபராதி போல் தாமரைக்கனி நடகமாடுவதை மக்கள் நம்ப தயாராக இல்லைஎன அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X