For Daily Alerts
Just In
அமர்நாத் செல்கிறார் ஜெயேந்திர சுவாமிகள்
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதன்கிழமை அமர்நாத்செல்கிறார்.
ஜெயேந்திர சுவாமிகள் கடந்த 22 ம் தேதி டெல்லி போய் சேர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதிஆர்.வெங்கட்ராமன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
டெல்லியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கியுள்ளார்.
இவர் புதன்கிழமை காலை தனி விமானம் மூலம் அமர்நாத் செல்கிறார். அமர்நாத்தில் தரிசனம் முடித்து விட்டு புதன்கிழமைஇரவே விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இந்தத் தகவலை காஞ்சி சங்கர மட மேலாளர் பி.சுந்தரேச அய்யர் காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, June 27, 2001, 5:30 [IST]