For Daily Alerts
Just In
மேட்டூர் பகுதியில் கர்நாடக அதிரடிப்படை
மேட்டூர்:
மேட்டூர் பகுதியில் கர்நாடக அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பனைத் தேடும் பணியில் முதலில் சுணக்கம் காட்டினர். ஆனால், இப்போதுசுறுசுறுப்படைந்துள்ளனர்.
பாலாற்று முகாமில் தங்கியிருந்த இந்த அதிரடிப்படை வீரர்கள், தற்போது தண்டாகேட் வழியாக அந்தியூர், கொளத்தூர் பகுதியில்தங்களது தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர். வீரப்பனுக்கு உணவு கொண்டு செல்லப்படும் வழியை இவர்கள் அடைக்கமுடிவு செய்திருப்பதால், கொளத்தூர் வனப் பகுதியில் வீரப்பன் வரக் கூடும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் பகுதியில் வீரப்பன் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்காலம் எனவும், இதைத் தேடிஅவன் வரக் கூடும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
Story first published: Wednesday, June 27, 2001, 5:30 [IST]