For Daily Alerts
Just In
ரயிலில் நகை கொள்ளையடித்த 2 பேர் கைது
கோவை:
கோவை ரயில் நிலையத்தில் நகை கொள்ளையடித்த இருவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
குமரியிலிருந்து பெங்களூர் செல்லும் ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் கோவை வழியாக புதனன்று இரவு சென்றது. இந்தரயில் கோவை ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, கோவை கோட்டை பகுதி வி.கே செட்டிவீதியைச் சேர்ந்தஸ்டீபன் (27) என்பவர் திருப்பூர் செல்வதற்காக அதில் ஏறினார்.
அப்போது அவரிடம் இருந்த தங்க நகையைப் பறித்துக் கொண்டு 2 பேர் ஓட முற்பட்டனர். ஆனால், ஸ்டீபன்கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டன. இந்தக் கொள்ளையர்கள் கேரள மாநிலம்பெரும்பூரைச் சேர்ந்த ஜேக்கப் (30), பத்மநாபபுரத்தைச் சேர்ந்த வகித் (45) என்பது தெரிய வந்தது.
இவர்களை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Thursday, June 28, 2001, 5:30 [IST]