For Daily Alerts
Just In
பதவியேற்றார் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்
சென்னை:
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக வளர்மதி ஜெபராஜ் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனில் நடந்தது. வளர்மதி ஜெபராஜூக்கு ஆளுநர் பாத்திமாக பீவிபதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வெங்கடாச்சலத்தைமுதல்வர் ஜெயலலிதா அப்பதவியிலிருந்து நீக்கினார்.
அப்பதவிக்கு மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி ஜெபராஜை நியமிக்கும்படி, ஆளுநரிடம் பரிந்துரைசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்மதி ஜெபராஜ், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Friday, June 29, 2001, 5:30 [IST]