For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.வியாழக்கிழமை அவர் தன் வீட்டு குளியல் அறையில் விழுந்து விட்டார்.

இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அவரது குடும்பத்தாரிடம் கேட்டபோது, ஆற்காடு வீராசாமியின்காலில் அடிபட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பிறகு அவர் குணமடைந்துவருகிறார் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X