For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு மீது நடவடிக்கை எடுப்போம்: மத்திய சட்ட அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மனிதாபிமானமற்ற முறையில் நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டது குறித்தும், மத்திய அமைச்சர்கள் கீழ்த்தரமானமுறையில் நடத்தப்பட்டது குறித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லேதெரிவித்தார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:

கருணாநிதி மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டது மிகவும் கீழ்த்தரமானசெயலாகும். இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும்.

தமிழ்நாடு போலீஸார் எப்படி ஒரு மத்திய அமைச்சரான முரசொலி மாறன் வீட்டுக்குள் செல்லலாம்? அதுவும் அவர் மேல் எவ்விதவழக்கும் இல்லாத பட்சத்தில் அவர் வீட்டுக்குள் எப்படிச் செல்லலாம்?

மத்திய அமைச்சர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்திய தமிழக போலீஸார் மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்என்றார்.

முன்னதாக, போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதால், பிபி அதிகரித்த நிலையில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறைஅமைச்சர் முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X