கருணாநிதியை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை:
வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்தியசிறையிலிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற அவரதுஉறவினர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்கள் அனைவரும் சிறைவாசலிலேயே காத்து நிற்கின்றனர்.
சென்னையில் பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுதி.மு.க.தலைவர் கருணாநிதியை போலீசார் கைது செய்தனர். அவரை அடுத்தமாதம்10ம் தேதிவரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் சென்னை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முரசொலிமாறனின் தம்பி முரசொலி செல்வம், சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின்மனைவி காவேரி, அவர்களது மகள், கருணாநிதியின் மகள் செல்வி வயிற்று பேத்தி ஆகியோர்கருணாநிதியை சந்திப்பதற்காக சென்னை மத்திய சிறைக்கு சென்றனர்.
ஆனால் போலீசார் கருணாநிதியை சந்திப்பதற்கு அவர்களுக்குஅனுமதியளிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்னமும் சிறைவாசலிலேயே காத்திருக்கிறார்கள்.
சிறைவாசலிலிருந்த நிருபர்கள் அவர்களிடம் கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுஎன்ன நடந்தது என கேட்டனர். அவர்கள் பதிலளிக்கையில்
போலீசார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.எங்கள் வீட்டிலுள்ள படுக்கைஅறைக்குள்ளும் அத்துமீறி நுழைந்தனர். வீட்டிலிருந்த பெண்களின் கையை பிடித்துஇழுத்தனர்.பெண்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டனர். எங்களுக்குவீட்டிற்கு செல்லவே பயமாக இருக்கிறது.
பெண்ணின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வரவாக்களித்த பெண்கள்தான் இதற்கு பொறுப்பு என்றனர்.