ஜெயா ஸ்டைல் : தேசிய கட்சிகள் ஆவேசம்
டெல்லி:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதற்கு பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸார் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று கைது செய்து இழுத்துச் சென்ற சம்பவம் பல அரசியல்கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ஜே.பி.மாத்தூர் கூறுகையில், கருணாநிதி மிகவும் கீழ்த்தரமான முறையில் அடித்துஇழுத்துச் செல்லப்பட்டது மனிதநேயமற்ற செயலாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
சமதா கட்சி பொதுச் செயலாளர் சாம்பு ஸ்ரீவத்சவா கூறுகையில், இது பழிக்குப்பழி வாங்குது போன்ற மிகவும் கீழ்த்தரமானசம்பவமாகும். ஜனநாயக விரோத செயல் என்றும் கூறலாம் என்றார்.
காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இது மிகவும் மோசமான, கீழ்த்தரமான சம்பவமாகும் என்றுகூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி பிரமுகர் அமர் சிங் கூறுகையில், தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அடித்து இழுத்துச் சென்றதுமிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் துரைசாமி ராஜா கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைது செய்த விதம்மிகவும் மோசமானதாகும். வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரைக் கைது செய்து இழுத்துச் செல்ல வேண்டிய அவசியமேயில்லைஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.