For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பதவி நீக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை வெள்ளிக்கிழமைபோலீசார் அடித்து இழுத்துச் சென்றது வாஜ்பாய் உள்பட நாட்டைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த சம்பவங்கள் குறித்து அறிக்கைஅனுப்புமாறு தமிழக ஆளுனர் பாத்திமா பீவிக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்குஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிவரை கெடுவும் விதித்திருந்தார்.

இதையடுத்து பாத்திமா பீவி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு முன் மத்தியஅரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தார்.

ஜெயாவுக்கு ஆதரவான ஆளுநரின் அறிக்கை:

பாத்திமா பீவி தனது அறிக்கையில், ஜெயலலிதா அரசையும் தமிழக போலீசின்நடவடிக்கையையும் ஆதரித்திருந்தார். கருணாநிதியைக் கைது செய்யச் சென்றபோலீஸ் மீது மத்திய அமைச்சர்களான மாறனும், பாலுவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால் தான் பிரச்சனை எழுந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிறியசிறிய வன்முறைச் சம்பவங்கள் தான் நடந்துள்ளன எனவும் தனது அறிக்கையில்கூறியுள்ளார்.

நீக்க முடிவு:

இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் டெல்லியில் வாஜ்பாய் தலைமையில்கூடிய மத்திய அமைச்சர ஆளுநர் பாத்திமா பீவியை உடனடியாக நீக்க முடிவுசெய்தது.

ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்கச் செய்யும் முன் தங்களுடன் பாத்திமா பீவிவிவாதிக்கவில்லை என்ற கடுப்பில் இருந்த மத்திய அரசிடம் ஆளுனர் இம்முறைவசமாக சிக்கிக் கொண்டார்.

தமிழக அரசு மற்றும் போலீசின் அடாவடிகளை ஆதரித்து அறிக்கை கொடுத்த அவரைஉடனடியாக நீக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X