For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநருடன் சந்திப்பை ரத்து செய்த பெர்னாண்டஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக நிலையை நேரில் அறிவதற்காக வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,தமிழக ஆளுநருடனான சந்திப்பை ரத்து செய்தார்.

பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல்கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.

இது குறித்து நிலைமையை நேரில் ஆராய்வதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ்பெர்னாண்டஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு சென்னை வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள கருணாநிதியை சிறையில் சென்று சந்தித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொடர்ந்து, தமிழக ஆளுநர்பாத்திமா பீவியையும் அவர் சந்திக்கவிருந்தார்.

ஆனால், மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ஜெயலலிதாவையும், கருணாநிதியை கைது செய்யும் போது போலீசார் நடந்துகொண்ட விதத்தையும் ஆளுநர் ஆதரித்திருந்தார். இதையடுத்து தமிழக ஆளுனர் பாத்திமா பீவியை பதவிநீக்கம் செய்ய மத்தியஅரசு முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து, பாத்திமா பீவியைச் சந்திக்கவிருந்த நிகழ்ச்சியை பெர்னாண்டஸல் ரத்து செய்து விட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X