For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் கருணாநிதியைச் சந்தித்தார் பெர்ணான்டஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிறையில் உள்ள கருணாநிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ்ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அவருடன் வந்துள்ள தே.ஜ. கூட்டணிக் குழுவின் உறுப்பினர்கள் விஜய்குமார் மல்ஹோத்ரா, தின்சா ஆகியோரும்சந்தித்துப் பேசினர்.

பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மத்திய அமைச்சர் முரசொலிமாறனையும் சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய பெர்ணான்டஸ், மத்திய அமைச்சர்களை கைது செய்யும் முன் குடியரசுத்தலைவரிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அவரிடம் அனுமதி பெறாமலேயே முரசொலிமாறனையும், டி.ஆர். பாலுவையும் கைது செய்துள்ளனர்.

இருதய நோயாளி என்று கூடப் பார்க்காமல் மாறனை அடித்துள்ளனர் போலீசார்.

இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து அனைத்தையும் பிரதமரிடம் தெரிவிப்பேன்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவெடுக்கும்.

முழு அளவில் மனித உரிமைகளை தமிழக போலீசார் மீறியுள்ளனர் என்றார் பெர்ணான்டஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X