For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் அழைத்தும் கூட பேச மறுத்த ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கருணாநிதி மீது நடந்த தாக்குதல் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச பிரதமர் வாஜ்பாய் பல முறை முயன்றார்.ஆனாலும், ஜெயலலிதா பேசவில்லை என பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழ்நிலைதமிழகத்தில் உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மரபுகள் மீறப்பட்டுள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தை மீறுபவர்கள் மீது, அதே அரசியல் அமைப்புச் சட்டம் பாயும். தமிழகத்தில் நடக்கும் அத்துமீறல்சம்பவங்களை அரசியலமைப்புச் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற மரியாதை கூடத் தெரியாமல் இரண்டு மத்திய அமைச்சர்களை தமிழகபோலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை தொடர்பு கொள்ள பிரதமர் முயன்றும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லைஎன்றார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X