For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குருவாயூர் சென்றார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிலா குருவாயூரில் தனது பிரார்த்தனைய நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை குருவாயூர்புறப்பட்டுச் சென்றார்.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் செய்துவந்தார். தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாகவேண்டிக் கொண்டார்.

தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த கண்னண் என்றயானையை வாங்கினார்.

அந்த யானையை ஜுன் மாதம் முதல் வாரத்தில் காணிக்கை செலுத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அரசியல் வேலைகள்காரணமாக அது இயலாமல் போனது. அதன் பின் மீண்டும் ஒரு நாள் குறிக்கப்பட்டு, அப்போதும் அவரால் குருவாயூர் செல்லஇயலாமல் போனது.

அவர் சென்ற மாதம் 30ம் தேதி, யானையை காணிக்கை செலுத்த குருவாயூர் வருவார் என குருவாயூர் தேவஸ்தானஅதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, யானை காணிக்கை செலுத்தவதற்கு தேவையான அனைத்துஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

ஆனால் அதுவும் தள்ளிப்போடப்பட்டது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க. தலைவர் கைதுசெய்யப்பட்டதால் ஜெயலலிதா தனது பயணத்தை ஒத்தி வைத்தார் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், குருவாயூரில் பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்காக திங்கள்கிழமை அதிகாலை தனி விமானம் மூலம்ஜெயலலிதா குருவாயூர் புறப்பட்டுச் சென்றார்.

கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமைபந்த் நடைபெறுகிறது. இந்நிலையிலும் தான் வேண்டியபடி, காணிக்கையை செலுத்த ஜெயலலிதா குருவாயூர் சென்றுள்ளார்.

ஜெயலலிதா யானையை காணிக்கை செலுத்திய பின், கேரளாவில் உள்ள மேலும் 10 கோவில்களுக்கும் செல்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X