மத்திய சிறை வாசலில் திமுகவினர் வன்முறை: போலீஸார் தடியடி
சென்னை:
சென்னை மத்திய சிறைச்சாலைக்கு வெளியே திமுக தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசி வன்முறையில் இறங்கியதைத்தொடர்ந்து, அவர்கள் மேல் போலீஸார் தடியடி நடத்தினர்.
சிறையில் இருக்கும் கருணாநிதியைச் சந்திப்பதற்காக, தெலுங்கு தேச எம்.பியான எர்றன் நாயுடு சென்னை மத்திய சிறைக்குவந்தார். ஆனால் அவரைப் போலீஸார் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதையடுத்து சிறைக்கு வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் கோபமைடந்து பயங்கர வன்முறையில் இறங்கினர். சிறைவாசலில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் மீது, அவர்கள் கற்களை எறிய ஆரம்பித்தனர்.
இதையடுத்து, திமுக தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், அவர்கள் அனைவரும் கலைந்து ஓடினர். பின்னர்அந்த வழியே சென்ற பஸ்கள் மீது கல்வீச்சில் இறங்கினர். இதில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.
அதில் பயணம் செய்த பயணிகள் பஸ்களில் இருந்து இறங்கி சிதறி ஓடினர்.
இதற்கிடையே, எர்றா நாயுடுவைச் சிறைக்குள் செல்வதற்குப் போலீஸார் அனுமதித்தனர். அவரும் உள்ளே சென்று,கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய அரசு ஆளுநரைத் திரும்ப அழைத்தை நாங்கள் வரவேற்கிறோம்.தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பதைப் பற்றி மத்திய அரசு தான் முடிவெடுக்கும்" என்று கூறினார்.