நான் அரசியல்வாதி இல்லை: பாத்திமா பீவி சீற்றம்
மாறா என்னைக் கைது செய்திருக்காங்க..
"மாறா என்னை கைது செஞ்சிருக்காங்க" என்று கருணாநிதி பேசுவது கேட்கிறது.
"எதுக்காக கைது? வாரன்ட் இருக்கிறதா?" என்று மாறன் பேசுவதும் கேட்கிறது.
வாரன்ட் இல்லாமல் கைது செய்வது குறித்து, மாறன் போலீஸாரிடம் கேட்கவே, போலீஸாருக்கும், அவருக்கும் வாக்குவாதம்நடக்கிறது.
அப்போது கருணாநிதியின் கையை யாரோ பிடித்து இழுக்க, மாறன் அதைத் தட்டி விடுகிறார். அதன்பிறகு, சிபிசிஐடி டிஐஜி முகமதுஅலி மற்றொரு அதிகாரியின் இடுப்பில் தட்டி கருணாநிதியை தூக்குமாறு சிக்னல் கொடுக்கிறார்.
இந்த நேரத்தில்தான் வேறு யாரோ ஒருவர் கருணாநிதியை தள்ளிவிட தடுமாறி சாய்கிறார் கருணாநிதி. அப்போது கருணாநிதியின்சட்டைக்காலரைப் பிடித்து ஒரு போலீஸ் அதிகாரி இழுக்கிறார்.
"இழுங்க..இழுங்க" என்று முகமது அலி மீண்டும் உத்தரவிடுகிறார். திடீரென மாறன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப்போலீஸார் தள்ளிவிடுகின்றனர்.
அப்போது "ஏய் பொம்பள மேல கைய வெக்காதே" என்று அனைவரும் கூச்சலிடுகின்றனர்.
அதற்குள் போலீஸார் கருணாநிதியின் கையைப் பிடித்து இழுத்து விடுகின்றனர். போலீஸார் கருணாநிதியை இழுப்பதைப் பார்த்து,ஆவேசமடைந்த மாறன் போலீஸாரை நோக்கி கையை ஓங்குவது போன்ற காட்சியும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகராறில் கருணாநிதியை ஆளுக்கொருபக்கம் இழுக்கின்றனர். இதில் அவர் தடுமாறி கீழே விழுகிறார். அவரை எல்லாரும்சேர்ந்து தூக்கி விடுகின்றனர். அப்போது மாறன் கீழே விழுகிறார். அத்துடன் அந்தக் காட்சி எடிட் செய்யப்படுகிறது.
சிபிசிஐடி அலுவலகத்தில்..
இதையடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் கருணாநிதி நடந்து வரும் காட்சி காட்டப்படுகிறது.
அப்போது கருணாநிதியின் காலில் செருப்பு இல்லை. ஆனால் வீட்டிலிருந்து வரும்போது, கருணாநிதி காலில் வெள்ளை நிறசெருப்பு இருந்தது.
அப்போது கருணாநிதி ஒரு அறையில் வைக்கப்படுகிறார். எந்த அறை என்ற காண்பிக்கப்படவில்லை. அத்துடன் அந்தக் காட்சிஎடிட் செய்யப்படுகிறது.
அடுத்து பரிதி இளம்வழுதி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வந்து, "சார் நான் எம்.எல்.ஏ. கருணாநிதியைக் கைது செய்து எங்கேவைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்கிறார்.
போலீஸார் எதுவுமே பேசாமல் இறுகிய முகத்துடன் நிற்கின்றனர்.