For Daily Alerts
Just In
தமிழக ஆளுநராக ரங்கராஜன் இன்று பொறுப்பேற்பு
சென்னை:
தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பொறுப்பேற்கிறார் ரங்கராஜன்.தற்போது ஆந்திர ஆளுநராக இருக்கும் ரங்கராஜன் தமிழக ஆளுநராகக் கூடுதலாகப் பொறுப்பேற்பார்.
இவர் திங்கள்கிழமை சென்னை வந்து தமிழக கவர்னர் பொறுப்பை ஏற்கிறார்.
தமிழகத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டு அடித்து இழுத்துச் செல்லப்பட்டதையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து சுயமாகவும்,நடுநிலையுடனும் மத்திய அரக்கு ஆளுநர் பாத்திமா பீவி அறிக்கை அனுப்பி வைக்காத காரணத்தால் அவரைப் பதவிநீக்கம்செய்வது என மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்குஞாயிற்றுக்கிழமை மாலை அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]