For Daily Alerts
Just In
கோவையில் 3,000 திமுக தொண்டர்கள் விடுதலை
கோவை:
கோவை மத்திய சிறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் திமுகதொண்டர்கள் 3,000 பேர் செவ்வாய்க்கிழமை மாலை விடுதலை செய்யப்படுவர்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து, திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியினர் திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த முழு அடைப்பினால், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்காக, திமுக தொண்டர்கள்ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் முழுவதும் 3,000 திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 நாட்களுக்கு பிறகு இவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை விடுவிக்கப்படுகின்றனர்.
Comments
Story first published: Saturday, May 19, 2001, 5:30 [IST]