சென்னைக்கு ரயிலில் வந்தது மேட்டூர் வாட்டர்!
சென்னை:
குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக மேட்டூரிலிருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீர்வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து சேர்ந்தது.
சென்னையில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியின் பேரில்நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமும், ஈரோட்டிலிருந்து ரயில் மூலமும் தினசரி குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இது போதவில்லை. இதையடுத்து தற்போது மேட்டூரிலிருந்தும் ரயில் முலம் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மேட்டூர் அணல் மின் நிலையத்திலிருந்து குடிநீர் நிரப்பப்பட்ட ரயிலை சேலம் மாவட்ட கலக்டர்தனஞ்செயன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த ரயில் வெள்ளிக்கிழமை சென்னை வந்தது.
மேட்டூரிலிந்து வரும் இந்தக் காவிரி நீர் சென்னை முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது. மொத்தம் 60டேங்கர்களில் இந்த தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்த ரயில் குடிநீர் வெள்ளிக்கிழமை முதல் சென்னை நகரில்வினியோகிக்கப்படும். கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ரயில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் தான்வினியோகம் செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.