For Daily Alerts
Just In
"நீதி விசாரணை ஒரு திசை திருப்பும் நடவடிக்கையே"
சென்னை:
கருணாநிதி கைது சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக அரசின் திசை திருப்பும்நடவடிக்கை என்று கூறினார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும், போலீஸாரின்நடவடிக்கை குறித்தும் நீதி விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
"மத்திய அமைச்சர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல், வீடியோ படங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதில்நீதி விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
நிச்சயமாக, தமிழக அரசின் இந்த உத்தரவு ஒரு திசை திருப்பும் நடவடிக்கையே" என்று கூறியுள்ளார் அன்பழகன்
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]