For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குருவாயூருக்கு கூடுதல் பஸ் .. ஜெ. உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு கூடுதல் பேருந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை-குருவாயூர் மார்க்கத்தில் மேலும் ஒரு பஸ் கூடுதலாக விடப்படும். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

மேலும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு, ஆண்டுக்கு 5 டன் சந்தனக் கட்டைகள் வழங்கவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் விலைக்கேற்ப இந்த சந்தனக் கட்டைகள் வழங்கப்படும். குருவாயூர்கிருஷ்ணன் கோவில் தேவஸ்தான வேண்டுகோளின்படி இது வழங்கப்படுகிறது என்று செய்திக்குறிப்பில்கூறப்பட்டிருந்தது.

சமீபத்தில் குருவாயூர் சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா அங்குள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு "கண்ணன்" என்றயானையை அன்பளிப்பாக வழங்கியது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து கூடுதல் பஸ் மற்றும் சந்தனக்கட்டைகள் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X