For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்கச் சென்ற அண்ணன்-தம்பி உள்ளிட்ட 3 பேர் கடலில் மூழ்கிஇறந்தனர்.

சென்னை அடையாறில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மகன்கள் சசிகுமார் (வயது 19), சாந்தகுமார்(வயது 18). இவர்கள் ப்ளஸ் 2 படித்து வந்தனர். இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சேகர். இவரது மகன்தினேஷ் (வயது 14).

விடுமுறை தினங்களில் நண்பர்கள் அனைவரும் கடலில் சென்று குளிப்பது வழக்கம். பல நண்பர்களுடன் சசிகுமார்,சாந்தகுமார், தினேஷ் ஆகியோரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரும் அலை ஒன்று வந்து,இந்த 3 பேரையும் இழுத்துச் சென்றுவிட்டது.

இவர்களைத் தவிர மற்ற நண்பர்கள் பத்திரமாகக் கரை ஏறிவிட்டனர். வெகு நேரமான பின்பும் அலையால்இழுத்துச் செல்லப்பட்ட மூவரும் கரை சேராததால், இவர்களது நண்பர்கள் போலீசுக்குத் தகவல் தந்தனர்.

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட 3 பேரும் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.மீனவர்களின் உதவியுடன் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணியை போலீசார்மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் ஒரு சிறுவனின் உடல் கரை ஒதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்தசிறுவன் கடலில் சிக்கி இறந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் சசிகுமார், சாந்தகுமார்,தினேஷ் ஆகியோரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் வந்து பார்த்த போது, அந்த சிறுவன் வேறொருவர் என தெரியவந்தது. அந்த சிறுவன் யார் என்பதுதெரியவில்லை.

கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் இறந்துபோயிருக்கலாம் என எண்ணம் நிலவி வரும் நிலையில், அவர்கள் உடலும் கிடைக்கவில்லை.

துறைமுகம் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய சிறுவன் யார் என்பது குறித்தும் போலீசார் வீசாரணை செய்துவருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X