தமிழர் விடுதலை படை தலைவரின் கூட்டாளி கைது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தவைவர் மாறனின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் மாறன். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் திட்டத்தில்முக்கியப் பங்கு வகித்தவர். ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, வீரப்பனுடன் இவர் இருந்து வந்தார்.
ராஜ்குமார் விடுதலைக்குப் பின்னர், வீரப்பனைத் தேடி வந்த அதிரடிப்படையினாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில்உள்ளது வரக்கால்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் சந்தேகப்படத்தக்க வகையில் ஒரு நபர் தங்கியிருப்பதாகபோலீசாருகுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கிராமத்தின் எல்லையில்பதுங்கியிருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அவர் பெயர் கவுரி சங்கர். அவரை சோதனை செய்த போலீசார் அவரிடமிருந்து டைரி ஒன்றை கைப்பற்றினர்.அதில் அதிரடிப்படை தலைவர் தேவாரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், நடிகைவிஜயசாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இவரை விசாரித்த போது, அவர் தமிழர் விடுதலை படை தலைவர் மாறனின் கூட்டாளியான ரமேஷ் என்பவரைச்சந்திக்க வந்தது தெரியவந்தது.
இவரை போலீசார் உளவுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது.