தெலுங்கு கங்கைத் திட்டம்
சென்னைக் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 1983-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பொதுப் பணித்துறை பொறியாளர்களிடம் புதிய திட்டம்ஒன்றைத் தருமாறு கோரினார்.
இதையடுத்து அப்போது தலைமைப் பொறியாளராக இருந்த சி.ஏ.சீனிவாசன் தலைமையிலான பொறியாளர் குழு சென்னைக் கால்வாய் திட்டத்தை(இதுகுறித்துத் தனியே விரிவாக தரப்பட்டுள்ளது) அரசிடம் கொடுத்தது.
மிகவும் சிறந்த திட்டமாகவும், செலவு குறைந்த திட்டமாகவும் (அன்றைய நிலையில் ரூ. 210 கோடி) கருதப்பட்ட இத் திட்டம் அரசிடம் வெகுவிரைவாக வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றினால் சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சினை நிரந்தரமாக தீரும் என்றும் அரசுக்குஅறிவுறுத்தப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆருக்கும், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நெருக்கம் மற்றும் நட்பு காரணமாகஇத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மாறாக, தெலுங்கு கங்கைத் திட்டம் உருவானது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நான்கு தென் மாநில முதல்வர்களின் முன்னிலையில், தமிழகமும் ஆந்திரமும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கானஉடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1983-ம் ஆண்டு மே 25ம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்திற்கு 12 டி.எம்.சி தண்ணீரை விட ஆந்திரம் ஒப்புக் கொண்டது.
இதற்காக ஸ்ரீசைலம் அணையிலிருந்து கண்டலேறு அணை வழியாக தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டு வருவதற்கானசெலவை தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தெலுங்கு கங்கைத் திட்டத்திற்கு சீனிவாசன் தலைமையிலான பொறியாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகதனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் அப்போதைய தலைமைச் செயலாளர் வி.கார்த்திகேயன் மற்றும்நிதித்துறைச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பலனில்லை.
தற்போது ஆந்திரத்திடம் பணத்தையும் கொடுத்து விட்டு தண்ணீருக்காக கெஞ்சிக் கொண்டுள்ளோம். கையில் வெண்ணைஇருக்கும்போது நெய்க்கு அலைந்த கதையாக சென்னைக் கால்வாய் திட்டத்தை புறக்கணித்து விட்டு தெலுங்கு கங்கைத் திட்டத்தைநிறைவேற்றியது அப்போதைய அரசு.
தெலுங்கு கங்கைத் திட்டத்தின் சில துளிகளை இங்கு பார்ப்போம்: