தமிழகத்தில் முதல் பெண் கால்பந்து கோச் நியமனம்
சென்னை:
தமிழகத்தில் முதல் பெண் கால்பந்து பயிற்சாளரை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நோயலின் ஜான் என்ற பெண்தான் தமிழகத்தின் முதல் பெண் கால்பந்துபயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஜெயலலிதாவிடமிருந்து நோயலின்செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார்.
தென்மண்டல மற்றும் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளில் 6 முறை விளையாடியுள்ளார் நோயலின்.
இவர் விளையாட்டுப் பயிற்றுநராக என்.ஐ.எஸ். பயிற்சியும் பெற்றுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனுக்களைக்கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நோயலின் ஜானும், தனக்கு கால்பந்து பயிற்றுநர் பணியை அளிக்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருந்தார்.
இதையடுத்தே, நோயலினுக்கு இப்பணியை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான கால்பந்து பயிற்சியாளராகப்பணியமர்த்தப் பட்டுள்ளார் நோயலின். ரூ.5,300-150-8,300 என்ற விகிதத்தில் அவருக்குச் சம்பளம்வழங்கப்படும.