For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய வீராணம் திட்டத்துக்கு ஜெ. அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மக்களின் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் விதமாக, புதிய வீராணம் திட்டத்திற்குத் தமிழக அரசுபுதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில், இந்த ஆண்டு கோடையில் சென்னையில் தண்ணீர் பஞ்சம்தலைவிரித்து ஆட்டியது. கோடை போய் ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஆட்டிக் கொண்டிருக்கிறது.

நெய்வேலி, ஈரோடு, மேட்டூர் என்று பல ஊர்களிலிருந்தும் தண்ணீர் "இறக்குமதி" செய்யப்பட்டது. இதெல்லாம்போதாதென்று, ஆந்திராவின் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்தும் கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போட்ட திட்டம் தான் புதிய வீராணம் திட்டம். இதற்குகருணாநிதி காலத்தில் முட்டுக் கட்டை போடப்பட்டது. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இந்தத்திட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் எனக் கூறியிருந்தார்.

சொன்னது மாதிரியே புதிய வீராணம் திட்டத்திற்கு புதன்கிழமை அனுமதியளித்து தமிழக அரசு ஆணையும்பிறப்பித்துவிட்டது.

இந்தப் புதிய வீராணம் திட்டத்தின் மூலம், நாளொன்றுக்கு 18 கோடி லிட்டர் தண்ணீர் சென்னை மக்களுக்குக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரூ.750 கோடி செலவில், புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பெரும்பாலான செலவைசென்னைப் பெருநகர் குடிநீர் வாரியமே ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.

மீதிச் செலவை தமிழக அரசும், ஹட்கோ நிறுவனமும் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றன.

புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்னும் ஆண்டுக் கணக்கில் ஆகலாம். ஆனால், காலம்கடந்தாவது சென்னை மக்களின் தண்ணீர்ப் பஞ்சம் இந்தப் புதிய திட்டத்தால் தீருமா? தீர்ந்தால் சரிதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X