For Daily Alerts
Just In
காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே புதன்கிழமைஏற்பட்ட மோதல்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் தீவிரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்பு படையினர் மீது தாக்கியதில், குறிதவறி மைசுமா என்ற இடத்தில்ரோட்டில் நடந்து நென்ற 2 பெண்களும், மாகம் என்ற இடத்தில் 7 பேரும் காயமடைந்தனர்.
இவர்களில் ஜனா என்ற பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதனால் மைசுமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இச்சம்பவத்தில், பாதுகாப்பு படையினர் ஒரு தீவிரவாதியை கைது செய்து, அவரிடமிருந்த ஏராளமானதுப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைக் கைப்பற்றினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, May 29, 2001, 5:30 [IST]