சனிக்கிழமை இந்தியா வருகிறார் முஷாரப்
டெல்லி:
சனிக்கிழமை இந்தியா வரவுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு மிக பலத்த பாதுகாப்புஅளிக்கப்படவுள்ளது.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பல பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால்தான் அதி தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய பாதுகாப்பு:
நேரடியாக மட்டுமல்லாமல் ரகசிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும்ஆயிரக்கணக்கான உளவுப் பிரிவினர் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
ரகசிய உளவுப் படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பாதுகாப்பு தொடர்பாக விவாதித்துவருகின்றனர்.
கடந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையைத் தாக்கிய லக்ஷர்-ஈ-தொய்பா அமைப்பு முஷாரபை எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
டெல்லி, ஆக்ரா, ஆஜ்மீர், ஜெய்பூர் ஆகிய நகரங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படுவர். அடுத்த நிலையில் தேசிய பாதுகாப்புப் படையினரும் முஷாரபின் சொந்த பாதுகாப்புப்படையினரும் பாதுகாப்பை கவனிப்பர்.
சனிக்கிழமை (14.07.01) காலை டெல்லி இந்திரா காந்த சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள பாலம்டெக்னிகல் ஏரியா விமான நிலையத்துக்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்குகிறார் முஷாரப். பின்னர் ஆக்ராவுக்குசெல்வார். திங்கள்கிழமை (16.07.01) மாலை ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் புறப்பட்டுச்செல்வார்.
டெல்லி தவிர, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
மெட்டல் டிடெக்டர்கள், பாம் ஸ்குவாட்கள், தீயணைப்புப் படையினர், மோப்ப நாய்கள், அதி நவீனஆயுதங்களுடன் கூடிய கவச வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காலை 8.30 மணிக்கு விமான நிலையம் வரும் முஷாரப் உடனடியாக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச்செல்லப்படுவார். அங்கு அவரை ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் வரவேற்பார். அவருக்கு சிவப்புக் கம்பளவரவேற்பு அளிக்கப்படும்.