சனிக்கிழமை இந்தியா வருகிறார் முஷாரப்
பின்னர் நாராயணுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மகாத்மா காந்தியின் சமாதிக்கு முஷாரப் செல்வார்.மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். காந்தி சமாதிக்கு செல்லும் முதல்பாகிஸ்தான் தலைவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவுக்குச் செல்வார்.இதையடுத்து தனது மூதாதையர்களின் வீடானநாகர்ஹவேலிக்குச் செல்வார்.
பிற்பகலில் பிரதமர் வாஜ்பாய் அவருக்கு சிறப்பு விருந்தளிப்பார். தாஜ் பேலஸ் ஹோட்டலில் இந்த விருந்துஉபசரிப்பு நடக்கும். மாலையில் ஜனாதிபதியின் சிறப்பு வரவேற்பில் முஷாரப் கலந்து கொள்வார்.
இரவில் ஜனாதிபதி மாளிகையில் முஷாரப் தங்குவார். இந்திய ஜனாதிபதி மாளிகையில் தங்க அனுமதிக்கப்படும்முதல் பாகிஸ்தான் அதிபரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலை முஷாரபும் வாஜ்பாயும் ஆக்ரா புறப்பட்டுச் செல்வார்கள். ஆக்ராவில் ஹோட்டல் ஜேபிபேலசில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை வாஜ்பாயும் முஷாரபும் பேச்சுவார்த்தை நடத்துவர். இரண்டுகட்டமாக இந்த பேச்சுவார்த்தை நடக்கும். இடையில் பிற்பகலில் முஷாரபுக்கு வாஜ்யாய் விருந்தளிப்பார்.
இடையில் இரு தலைவர்களும் தாஜ்மகால் செல்வர்.
திங்கள்கிழமை முஷாரப் ஆஜ்மீர் செல்வார். அங்குள்ள காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவுக்கு செல்வார். பின்னர்ஆஜ்மீரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் இஸ்லாமாபாத் திரும்புவார்.