மெகா குழப்பத்தில் தமாகா!
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் எந்தமுடிவையும் தீர்மானமாக எடுக்கவில்லை.
மெளனமாக உள்ளது என்பதை விட குழப்பமாக உள்ளது என்பதே சரியான வார்த்தையாகும். தமாகா தலைவர்மூப்பானரின் மகன் கோவிந்தவாசன் சமீப காலமாக கட்சிக்குள் சிலரால் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறார்.இதற்கு மூப்பனாரின் ஆசி உள்ளதா என்பது உறுதியாக தெரியாத நிலையில், எம்.பி. தேர்தலிலும்கோவிந்தவாசனே நிற்க வேண்டும் என்று சில தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோவிந்தவாசனுக்கு ஆதரவாக அவர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். வியாழக்கிழமை நடந்த தமாகாஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், கோவிந்தவாசன்தான் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, 21எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். தமாகாவக்கு மொத்தம் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
தற்போது எம்.பியாக உள்ள ஜெயந்தி நடராஜனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சரும், முக்கியபிரமுகருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை நடந்தஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
தமாகா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கோவிந்தவாசனை நிறுத்த வேண்டும் என்ற ஒரு வரித் தீர்மானம்நிறைவேற்றப்பட்டதும் அந்த முடிவை எம்.எல்.ஏக்கள் மூப்பனார் வீட்டிற்குச் சென்று தெரிவித்தனர். அதை அவர்மெளனமாக கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே மூப்பனார் முன் சில குழப்பங்கள் விடை காணப்படாமல் உள்ளன.
தான் எம்.பியாக இருப்பதால், மகனையும் எம்.பியாக்கினால் பிறர் கேலி செய்ய மாட்டார்களா? தனது மகனைஎம்.பியாக்கி விட்டால், பிறகு மற்ற கட்சிகளைப் பார்த்து வாரிசு அரசியல் என்று குறை கூற முடியாதே என்ற பலகேள்விகள் அவர் முன் உள்ளன.
இந்த நிலையில் கோவிந்தவாசன் ஒருவேளை எம்.பி. தேர்தலில் நிற்காவிட்டால் அவருக்குப் பதில் கட்சியின்செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் அல்லது துணைத் தலைவர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புஅளிக்கப்படலாம் என்று தெரிகிறது. நிச்சயம் ஜெயந்திக்கு வாய்ப்பு இருக்காது என்றே கட்சிக்குள் பேச்சுஅடிபடுகிறது.