For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு மீது கடந்த 1995 - 96 ம் ஆண்டு நடந்த சுடுகாட்டு ஊழல் வழக்கில்சி.பி.ஐ போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய, கருணாநிதி உட்பட பல திமுகவினர் கைதிற்குக்காரணமான மேம்பால ஊழல்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரிடம் புகார் கொடுத்தவர்தான் ஆச்சார்யலு ஆவார்.

இவர் முந்தய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது, சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்,அப்போதைய அமைச்சர்செல்வகணபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.

தற்போது 2 முறையாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், நாகை மாவட்டத்தில் 96 சுடுகாட்டு கூரைகள்அமைப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 30,000 ஒதுக்கப்பட்டது.

இதில் சமார் ரூ12 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2 பேர் தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி, காண்ட்ராக்டர் பாரதி, திட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கூட்டுறவு சங்க அதிகாரி ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல்தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் ஊழல்:

மொத்தம் 18 மாவட்டங்களில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த ஊழல் வழக்கில் 10 வழக்குகள் மீது மட்டுமேகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 8 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X