கருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை
சென்னை:
சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு மீது கடந்த 1995 - 96 ம் ஆண்டு நடந்த சுடுகாட்டு ஊழல் வழக்கில்சி.பி.ஐ போலீசார் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இவர் முந்தய அதிமுக ஆட்சிக்காலத்தின் போது, சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்,அப்போதைய அமைச்சர்செல்வகணபதியுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்.
தற்போது 2 முறையாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், நாகை மாவட்டத்தில் 96 சுடுகாட்டு கூரைகள்அமைப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 30,000 ஒதுக்கப்பட்டது.
இதில் சமார் ரூ12 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த 2 பேர் தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி, காண்ட்ராக்டர் பாரதி, திட்ட அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கூட்டுறவு சங்க அதிகாரி ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல்தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 மாவட்டங்களில் ஊழல்:
மொத்தம் 18 மாவட்டங்களில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த ஊழல் வழக்கில் 10 வழக்குகள் மீது மட்டுமேகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 8 வழக்குகள் மீது குற்றப்பத்திரிக்கை தயார் நிலையில் உள்ளன.