For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம-து-ரை-யில் அதிமு--க தொண்-டர் ஓட ஓட விரட்-டிக் கொ-லை-

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரையில் அதிமுக தொண்டர் பட்டப்பகலில் சாலையில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாநகராட்சி கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி படுகொலை செய்யப்பட்ட அதேவில்லாபுரம் பகுதியில்தான் இந்தப் படுகொலையும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வில்லாபுரம் சோலைப் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரி. அதிமுகவைச் சேர்ந்தவர். அப்பகுதியில் பன்றிகளைவளர்த்து விற்பனை செய்து வந்தார். அவருக்கும், வில்லாபுரத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகத் தெரிகிறது.

சனிக்கிழமை மதியம் மாரி அவரது தாயார் முனியம்மாள், சகோதரர்கள் கோபி மற்றும் சதுரகிரி ஆகியோர்பன்றிகளை விற்க வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றனர். காளியம்மன் கோவில் குரங்குத்தோப்பு என்ற இடத்தில்வருகையில், ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.

அவர்களது கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அக்கும்பல் மாரியை வெட்டமுயன்றனர். அப்போது முனியம்மாளும், அவரது பிற மகன்களும் அவர்களைத் தடுக்க முயன்றனர்.அப்போது அவர்களுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.

அக்கும்பலிடமிருந்து தப்பித்து ஓடிய மாரியை கும்பல் விரட்டிச் சென்றது. வில்லாபுரம் நூலகம் அருகேயுள்ளஅம்பலக்காரர் தெரு வரை விரட்டிச் சென்ற அக்கும்பலின் பிடியில் மாரி சிக்கிக் கொண்டார். பின்னர் மாரியைஅக்கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் மாரி அங்கேயே இறந்தார்.

காயமடைந்த முனியம்மாள், கோபி, சதுரகிரி ஆகியோர் அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாரியை வெட்டிக்கொன்று தப்பிய கும்பலை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X