23-ம் தேதி நாடாளுமன்ற கூட்டம்
டெல்லி:
இந்த மாதம் 23ம் தேதி கூட உள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில்9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இந்தமாதம் 23ம் தேதி கூடுகிறது. இந்தகூட்டத்தொடர் அடுத்த மாதம் 31ம் தேதி வரை நடைபெறும்.
இதில் சபையின் ஒப்புதலுக்காக வைக்கப்பட வேண்டிய மசோதாக்கள் பற்றி மத்தியஅரசு துறை செயலாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளுடனும் நாடாளுமன்றவிவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் வெள்ளிக்கிழமை ஆலோசனைசெய்தார்.
முதலில் இந்த கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதாகஇருந்தது.
ஆனால் தற்போது தொலை தொடர்புத்துறை ஒருங்கிணைப்பு, இன்ஷுரன்ஸ் சட்டதிருத்தம், போட்டிகள், பாஸ்போர்ட் சட்ட திருத்தம், கம்பெனிகள் சட்ட திருத்தம்,கடற்கரை பகுதி தாதுக்கள் மேம்பாடு. டெல்லி அபார்ட்மென்ட் உரிமை ஒழுங்குமுறைஉள்ளிட்ட 9 மசோதக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட உள்ளன.
இவை தவிர விவசாயிகள் உரிமை மசோதா, மத்திய விற்பனை வரி சட்ட திருத்தமசோதாஆகியவை தொடர்பான மசோதாக்களும் தாக்கல் செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.