ஏவுகணையை அழிக்கும் ஏவுகணை: அமெரிக்காவின் சோதனை வெற்றி
வாஷிங்டன்:
எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் வெளியிலேயே எதிர் கொண்டு அழிக்கும் அமெரிக்காவின் ஆயுத சோதனைசனிக்கிழமை வெற்றியடைந்தது.
பலமுறை இந்த சோதனை தோல்வியைத் தழுவி வந்தது.
டிபென்ஸ் ஷீல்ட் எனப்படும் இந்த ஆயுத சோதனைக்கு ரஷ்யா, சீனா, இந்தியா உள்பட பல நாடுகள் கடும்எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இதன் மூலம் மீண்டும் ஆயுதப் போட்டியை அமெரிக்க தூண்டுவதாகக்குற்றச்சாட்டப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்புப் பிரிவான பென்டகன் இந்த சோதனைக்கான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துநடத்தி வந்தது.
சனிக்கிழமை கலிபோர்னியாவிலிருந்து செலுத்தப்பட்ட டம்மி ஏவுகணை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணையைமார்ஷெல் தீவுகளில் இருந்து செலுத்தப்பட்ட எதிர் ஏவுகணை வானிலேயே வழிமறித்துத் தாக்கி அழித்தது.
இந்த டம்மி ஏவுகணையை மணிக்கு 21,000 கி.மீ. வேகத்தில் சென்று எதிர்கொண்டு அழித்தது எதிர் ஏவுகணை(இன்டர்செப்டார் மிசைல்).
தொடர்ந்து இந்த சோதனைகளை அமெரிக்கா நடத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.