For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் ஒரு நாள் இந்தியாவில் தங்க முஷாரப் தயார்

By Staff
Google Oneindia Tamil News

ஆக்ரா:

தேவைப்பட்டால் மேலும் ஒரு நாள் இந்தியாவில் தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராகஇருப்பதாகவும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பேச்சால் இந்தியத் தரப்பில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

அதே போல, பாகிஸ்தான் வருமாறு வாஜ்பாய்க்கு முஷாரப் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

இது தவிர சில மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்திலும் இருவரும் சந்தித்துப் பேசலாம்எனவும் இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

வாஜ்பாய்- முஷாரப் இடையிலான முதல் கட்ட சந்திப்பு வெற்றியடைந்துள்ளதாக இந்தியாவும் பாகிஸ்தானும்தெரிவித்துள்ளன.

இந்த உயர் மட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸதானிலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையால் உடனடியாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டாலும் கூட, இரு நாடுகளின்உறவையும் மேம்படுத்த ஒரு முதல் கட்ட முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை அமையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இனி இரு நாடுகளும் அடிக்கடி சந்தித்துப் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பிரிந்த பிறகு நடக்கும் முதல் உயர் மட்ட மாநாடு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X