வாஜ்பாய்-முஷாரப் தனி சந்திப்பு முடிந்தது
ஆக்ரா:
இந்திப் பிரதமர் வாஜ்பாய்- பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு சுமார் 1 மணிநேரம் 40 நிமிடம் நீடித்தது.
முதலில் அரை மணி நேரம் தான் இருவரும் தனியே சந்தித்துப் பேசுவது என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்தப் பேச்சுவார்த்தை மிக நல்ல முறையில் நடந்ததாகவும், இரு தலைவர்களும் காஷ்மீர், தீவிரவாதம், வளர்ச்சி,அமைதி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக (பாஸிட்டிவ்) இருந்ததாக இரு நாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த தனிப்பட்ட சந்திப்பு முடிந்த பிறகு பகல் 1.55 மணிக்கு இந்திய, பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளும் வாஜ்பாய், முஷாரபுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் இப்போது நடந்து வருகின்றன. 2.30 மணிக்கு இரு தரப்பினரும் பகல் உணவு அருந்துவார்கள்.அப்போதும் கூட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.