தாஜ்மகாலிடம் தோற்ற ராணுவ ஜெனரல்
ஆக்ரா:
என் வாழ்வில் இவ்வளவு அழகிய நினைவுச் சின்னத்தை (தாஜ்மகால்) பார்த்ததே இல்லை என்று கூறிய வண்ணம்தான் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார் பாகிஸ்தான் அதிபரும் ராணுவஜெனரலுமான பர்வேஸ் முஷாரப்.
ஆக்ராவில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ள அமர் விலாஸ் ஹோட்டலின் அறையில் எந்த இடத்தில் நின்றுபார்த்தாலும் தாஜ்மகால் தெரியும். காலை தனது ஹோட்டல் அறையில் நுழைந்த அவர் ஒவ்வொரு இடத்திலும்நின்று தாஜ்மகாலின் ஒவ்வொரு கோணத்தையும் பார்த்து ரசித்தார்.
இது அவரது ராணுவ இறுக்கத்தைத் தளர்த்தி உற்சாக மூடுக்குக் கொண்டு வந்தது. காலர் இல்லாத சட்டை, பேண்ட்ஸ்என மிக கேஷூவல் உடைக்கு மாறினார் முஷாரப்.
வாஜ்பாய் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தவுடன் தனக்கு அரசு அருமையான ஹோட்டல் அறையைை ஒதுக்கிக்கொடுத்ததற்கு வாஜ்பாய்க்கு நன்றி தெரிவித்தார்.
வாஜ்பாயுடன் முஷாரப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது மனைவி ஷெபாஆக்ராவின் முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான பதேபூர் சிக்ரியைப் பார்வையிட்டார். மிக ஆர்வத்துடன்அந்த இடத்தை வலம் வந்தார்.
வாஜ்பாயும் முஷாரபும் பேசிக் கொண்டிருந்தபோது இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தனியேசந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினர்.
வாஜ்பாய், முஷாரப், பாகிஸ்தான் அமைச்சர்கள், இந்திய அமைச்சர்கள் என பெரும் தலைகள் ஆக்ராவில்முகாமிட்டிருப்பதால் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், தேசியப் பாதுகாப்புப் படையினர்,போலீசார் ஆகியோர் படு டென்சனில் உள்ளனர்.
ராணுவ மருத்துவனைகள், பெரிய தனியார் மருத்துவனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தத்தலைவர்களின் பிரிவைச் சேர்ந்த ரத்தமும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வண்டிகள்,ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தின் அருகே தான் யமுனை நதி ஓடுகிறது. இங்கு பல நாட்களாக இரவு பகலாகபடகுகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இப்போது பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்நிலையிலும் ராணுவ ஹெலிகாப்டர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.