For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரவிலும் தூங்காமல் பேச்சுவார்த்தை

By Staff
Google Oneindia Tamil News

ஆக்ரா:

சனிக்கிழமை காலை பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சுவார்த்தை நடத்திய பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இரவிலும் ஒருமுறை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அதே போல பகலில் தொடங்கிய இந்திய-பாகிஸ்தான் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்துஇரவிலும் நடந்தது.

இரு நாட்டுக் குழுவினரும் இரவு முழுவதும் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இரவுமுழுவதும் தூங்கவில்லை.

வாஜ்பாய்-முஷாரப் இருவரும் இரு சுற்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதும் இந்த இரு நாட்டுத்தூதுக் குழுவினரும் தனியே சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்தத் தூதுக் குழுவினரின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என இரு தரப்பிலும் தீவிரமாகஉள்ளனர். இதனால் ஆலோசனைகள் இரவு பகலாக நடக்கின்றன.

இரு நாடுகளும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை வெளியிடும் எனவும் தெரிகிறது.

இன்று (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு முஷாரப் தனது குழுவினருடன் பாகிஸ்தான் திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X