ரமேஷ் சாவில் மர்மம் உள்ளது என்கிறார் போலீஸ் கமிஷ்னர்
சென்னை:
ஸ்டாலின் நண்பர் ரமேஷ் சாவில் உள்ள மர்மங்கள் விரைவில் அவிழ்க்கப்படும் என்று சென்னை போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது முத்துக்கருப்பன் கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்ட அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாவில்மர்மங்கள் உள்ளதாகத் தெரிகிறது.
ரமேஷ் வீட்டில் சிக்கிய கடிதத்திலும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரமேஷ் படித்தவர். ஆனால் அந்தக் கடிதத்தில்நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.
எனவே அது ரமேஷின் கையெழுத்து தானா என்பதை ஆராய அந்தக் கடித நகல், கோர்ட் மூலம் தடயவியல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் எந்தவிதமான சொந்த பிரச்சனைகள் பற்றியோ, செய்த தவறுக்கு வருந்தியோ எதுவும்இல்லை. முற்றிலும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளாகவே உள்ளன.
மேலும் அது, தனது 3 குழந்தைகளை பறிகொடுக்கும் ஒரு தந்தையின் கடிதமாகத் தெரியவில்லை. நன்றாகஆராய்ந்து எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது.
அதேபோல, 5 பிணங்களும் கட்டிலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல இருந்தது. மேலும் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு, அவர் தனது 3 குழந்தைகளையும் பெங்களூரில் ஒரு பள்ளியில் சேர்த்து விடத்திட்டமிட்டிருந்தார்.
ஒருவார இடைவெளியில் எப்படி ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட முடியும்?. இதுவும் சந்தேகத்தைக்கிளப்பியுள்ளது. பிரேத பரி சோதனை அறிக்கைவந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ