For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி கைது சம்பவம்: மத்திய அரசுக்கு தி.மு.க. தந்தி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தின் போது, அராஜகம் செய்த போலீசார் மீது மத்திய அரசு நேரடிவிசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர்கள் மத்திய அரசுக்குத் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.

தவறு செய்த போலீசாருக்குத் தக்க தண்டனையும் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்தத் தந்தியில்கூறியுள்ளனர்.

கருணாநிதி கைது செய்யப்பட்ட 4 நாட்களுக்குள்ளாகவே, முரட்டுதனமாக நடந்து கொண்ட போலீசார் மீது மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கருணாநிதி கைது போது நடந்தது என்ன என்பது குறித்தும் போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்களா என்பது குறித்தும் விசாரிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா விசாரணை கமிஷன் அமைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. ராமன் தலைமையில் இந்த தனிநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விசாரணை கமிஷனை புறக்கணிப்பதாக தி.மு.கவினரும், தி.மு.க.தலைவர் கருணாநிதியும்கூறியுள்ளனர்.

இந்நிலையில் தவறு செய்த போலீசாரிடம் மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த வேண்டும், தவறுசெய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தி.மு.க.தலைவர்கள் மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பியுள்ளனர்.

பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்ணான்டஸ், மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இந்தத் தந்திஅனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் தந்தியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் போலீசாரின் கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. தி.மு.க.தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும்பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறன. இதையடுத்து, போலீசார் தொந்தரவு காரணமாக, சென்னை நகர மேயர்மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் ரமேஷ் கடந்த திங்கள்கிழமை தன் குடும்பத்தாருடன்தற்கொலை செய்து கொண்டார்.

அ.தி.மு.க.அரசு மத்திய அரசின் உத்தரவை மீறி வருகிறது. தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தவறுசெய்த போலீஸ் அதிகாரிகளைக் காக்கும் விதத்தில் எடுக்கப்படுகிறது. மேலும், தவறு செய்த போலீசாரைஆதரித்துதான் அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், தமிழக அரசுக்கு சாதகமாகவே முடிவு அளிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை கமிஷனின் முடிவுகள் எவ்வாறுஇருக்கும் என்பதை ஜெயலலிதாவின் அறிக்கைகளே தெளிவாகக் கூறுகின்றன.

மேலும், கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது தங்களுக்கு சாதகமாக இருக்கும்போலீஸ் தரப்பு வீடியோ காட்சிகளை ஒளிபரப்புமாறு கேபிள் டிவி ஆபரேட்டர்களை தமிழக அரசுகட்டாயப்படுத்தியுள்ளது.

தக்க நியாயம் கிடைக்க மத்தியஅரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கவினர் அந்தத்தந்தியில் கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X