For Quick Alerts
For Daily Alerts
Just In
சிபிஐ விசாரணை தேவை: திருமாவளவன்
சென்னை:
ரமேஷ் குடும்பம் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
காவல் துறையை தமது ஏவலாள் கும்பலாக நடத்துவதை அதிமுக அலசு கைவிட வேண்டும்.
மத்திய அரசு எச்சரித்த பின்பும், அதிமுக அரசின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்பது ரமேஷ் தற்கொலைமூலம் நன்றாகத் தெரிகிறது.
ரமேஷ் தற்கொலை வழக்கை காவல்துறை விசாரித்தால், நீதி குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விடும்.
ஆகவே இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரித்து தற்கொலைக்குக் காரணமானவர்களைத்தண்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
Comments
Story first published: Saturday, May 12, 2001, 5:30 [IST]