For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு: கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு அருகே நடந்த ஒரு கொலை சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள்என்பவரை, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொலை செய்தது.

இதையடுத்து போலீசார் கொலையாளிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்புவியாழக்கிழமை காலை கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கொலையாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.

பின்னர், அவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X