ரமேஷின் 2வது கடிதம் சிக்கியது
சென்னை:
தற்கொலை செய்யும் முன் போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம் கிடைத்துள்ளது.
ரமேசும் அவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொண்டு 3 நாள் ஆகிவிட்டது. இந்நிலையில் 3 வது நாள்சடங்குகளுக்காக வீட்டைச் சுத்தப் படுத்தும்போது, போலீஸ் கமிஷனருக்கு ரமேஷ் எழுதிய மற்றொரு கடிதம்சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்ட்டுள்ளதாவது:
என் மீது போட்ப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து போராட வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால்,29.06.2001 அன்று கருணாநிதி அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு இந்த நாடே பீதியில் உள்ளது.
எனவே, என் போன்ற சாதாரணமானவர்களால் உங்களைப் போன்ற அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும்எதிர்த்துப் போராட முடியாது என்பதால்தான், நானும் என் மனைவியும் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தோம்.
எனக்கு செங்கல்பட்டு முன்னாள் எம்.பி. பரசுராமனைத் தெரியாது. இதை முதல்வர் ஜெயலலிதா வணங்கும்குருவாயூரப்பன் மீது ஆணையாகச் சொல்கிறேன்.
மேலும் என்னிடம் தெய்வசிகாமணி எந்தக் காண்டிராக்டையும் அவருக்கோ, அவர் நண்பர்களுக்கோகேட்கவில்லை. கேட்டாலும் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. என் தாய் மேல் ஆணையாகச் சொல்கிறேன்,இதற்காக தெய்வசிகாமணியிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
மேலும் எனக்கும் மேயர் ஸ்டாலினுக்கும் எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. அவர் என்னுடைய நண்பர்அவ்வளவுதான் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.