For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போஸ்ட் மார்ட்டம் "திடுக்" ரிப்போர்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தொழிலதிபர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்ததையடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சாவில் மர்மம்இருப்பதாக, சேன்னை போலீ"ஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட 5 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வியாழக்கிழமைவெளியிடப்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்தான் இந்த போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது.

போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரமேசின் குழந்தைகள் 3 பேர் மட்டும் ஒரே நேரத்தில் இறந்துள்ளனர். அதன் பிறகு ரமேசும் அவரது மனையியும்இறந்து இருக்கலாம்.

11 மாத குழந்தை டிங்கு வயிற்றில் மட்டுமே உணவுப் பொருள் இருந்தது. மற்ற 4 பேர் வயிற்றிலும் உணவுப்பொருட்கள் எதுவும் இல்லை. விஷம் கலந்த குளிர் பானம் மட்டுமே இருந்தது.

எனவே அவர்கள் வாந்தி எடுக்கவில்லை. விஷத்தை திடப்பொருளுடன் கலந்து குடித்தால் மட்டுமே வாந்தி எடுக்கவாய்ப்புள்ளது.

"பேகான்" என்ற பூச்சி மருந்தை அவர்கள் குடித்திருக்கலாம். ஆனால், "சயனைடு" சாப்பிட்டதற்கான அறிகுறிகள்இல்லை.

மேலும் 5 பேர் உடலிலும் காயம் எதுவும் இல்லை என்று அந்த ரிப்போர்ட் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X