For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மீது புகார் கொடுத்த அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுடுகாட்டுக் கொட்டகை அமைத்ததில் நடந்த ஊழலில் ஏற்கனவே வழக்குகளைசந்தித்து வரும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலு மீது மேலும் 2 ஊழல்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ஜெயலலிதா முதன்முதலாக முதல்வராக பதவிவகித்த காலத்தில் சுடுகாடுகளில்மேற்கூரை அமைப்பதில் மதுரை மாவட்டத்தில் ஊழல் நடந்தது.

பல மாவட்டங்களிலும் இது போன்ற ஊழல் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையரும், அப்போதைய ஊரகவளர்ச்சித்துறை செயலருமான ஆச்சார்யலு, அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டோர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் ஊழல்...

இந்நிலையில் ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த ஊழல்நடந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை அடுத்து ஆச்சார்யலு உள்ளிட்டோர் மீது புதிதாக 2 வழக்குகள் தொடர மத்தியஅரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் சி.பி.ஐ. சார்பில் ஆச்சார்யலு மீது வழக்குகள்போடப்படும் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X